.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Wednesday, January 20, 2021

பதின் மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட பாடசாலைக்கல்வி நிகழ்ச்சித்திட்டம்

பதின் மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட பாடசாலைக்கல்வி நிகழ்ச்சித்திட்டம் எனப்படுவது இலங்கையின் அனைத்து மாணவர்களினதும் கல்வி உரிமையைப் பாதுகாத்தல் மற்றும் திறண்களை விருத்தி செய்யும் நோக்கில், கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் ஒரு நிகழ்ச்சித்திட்டமாகும்.

இது க.பொ.த சாதாரண தரப்பரீட்சையின் வெற்றி> தோல்வியைப் பொருற்படுத்தாது மாணவர்கள் உயர்தரத்திற்கு உள்வாங்கப்படக் கூடிய புதிய தொழில் முறைப் பாடத்துறையாகக் காணப்படுகின்றது. அந்தவகையில், கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு வருட காலத்திற்கு உயர்தர பாடசாலைக் கல்வியினை தொடரும் வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படுகின்றது.

Saturday, January 16, 2021

கல்வி அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'பாடசாலை பண்புசார் விருத்தி நிகழ்ச்சித்திட்டம்'

2001 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலைகளுக்கு அறிமுகஞ் செய்யப்பட்ட மதிப்பீட்டு முறை காலத்தின் தேவைக்கேற்ப பல்வேறு திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. இந்தவரிசையில் 2009 ஆம் ஆண்டில் புதிய மதிப்பீடு மற்றும், மேற்பார்வைப் படிமுறை (சுற்றுநிருப இல. 2008/06) மூலம் பாடசாலைகளில் சுயமதிப்பீட்டை பலப்படுத்துவதற்கு சில வசதிகள் வழங்கப்பட்டன. இம்முறைமை பாடசாலைகளில் பல வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், தற்கால தேவைகளுக்கு பொருந்தும் வகையில் பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளின் பண்புசார் விருத்தியை வளப்படுத்துவதில் புதிய மதிப்பீட்டுக் கலாச்சாரம் ஒன்றை நிறுவும் காலத்தின் தேவையெழுந்தது.

Saturday, January 9, 2021

இலங்கையின் கல்விப்புலம் சார்ந்த முக்கிய தகவல்கள் தொடர் 02

இலங்கையில் கல்வி சார்ந்த அரச துறைகளுக்கான ஆட்சேர்ப்புக்கள் மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொள்ள நடத்தப்படும் SLEAS, SLTES, SLPS, SLTS போன்ற பரீட்சைகளுக்கும், மேலும் பல்வேறு வகையான தகுதிகான் மற்றும் நுழைவுப் பரீட்சைகளுக்கும் உதவும் வகையில் கல்விப்புலத்துடன் தொடர்புடைய பல தகவல்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.