.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, May 30, 2017

வரலாற்றில் முஸ்லிம் ஸ்பெய்ன்



ஸ்பெய்ன் என்பது ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் காணப்படும் ஐபீரியத் தீபகற்பத்தில்; அமைந்துள்ள ஒரு நாடாகும். இது தனது மேற்கு எல்லையில் போர்த்துக்கல்லையும், தெற்கு எல்லையில் ஜிப்ரால்டர் மற்றும் மொரோக்கோவையும், வடகிழக்கில் பிரைனீஸ்ட் மலைத்தொடர் மற்றும் பிரான்சின் ஒரு பகுதியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. ரோமப் பேரரசின் ஒரு பகுதியாகக் காணப்பட்ட இப்பிரதேசம் ஹிஜ்ரி 92ல் (கி.பி 711) முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டது. அன்று முதல் ஹிஜ்ரி 898 (கி.பி 1492) வரை சுமார் 8 நூற்றாண்டுகள் முஸ்லிம்களால் ஆட்சி செய்யப்பட்டது. இக்காலப் பகுதியில் ஸ்பெய்ன் அறிவியல், அழகியல், நாகரீகம் மற்றும் கலாசாரம் என பல்வேறு துறைகளிலும் உச்ச கட்ட வளர்ச்சியைக் கண்டு செழிப்புற்று விளங்கியதுடன், அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடந்த ஐரோப்பாவுக்கு ஒளியை ஊட்டிய மூலமாகவும் காணப்பட்டது. எனவேதான் அதன் வராலாற்றுப் பின்னனியையும், பல்துறைப் பங்களிப்புக்களையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Friday, March 31, 2017

ஏப்ரல் பூல் (முட்டாள்கள் தினம்) ஓர் எச்சரிக்கை


ஏப்ரல் 1 என்றாலேஏமாற்றுதல் என்றுபொருள் கொள்ளும் அளவிற்குஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி இன்றுமாற்றப் பட்டிருக்கிருக்கின்றது. அன்றைய தினத்தில் ஒருவர் தமது நண்பர், உறவினர், ஏனையவர்களிடம் பொய்களைச் சொல்லி நம்பவைத்து ஏமாற்றி, அவர்களை கஸ்டத்துக்கும், பதற்றத்துக்கும் உள்ளாக்கி ஏளனமாகச் சிரித்து மகிழ்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இன்று இத் தீயகலாச்சாரம் உலகளவில் இன, மத, பிரதேச வேறுபாடின்றி அனைத்து தரப்பாரிடமும் பரவியுள்ளதைக் காணலாம்.

Wednesday, March 29, 2017

உஸ்மானிய பேரரசும் கொன்ஸ்தாந்து நோபில் வெற்றியும்

மத்திய ஆசியாவில் வாழ்ந்த துருக்கியர்கள் கி.பி 7ம் நூற்றாண்டில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதுடன், 10ம் நூற்றாண்டளவில் ஈராக், ஈரான், சிரியா போன்ற பகுதிகளில் குடியேறினர். இவ்வாறு குராசானில் குடியேறியிருந்த இவர்களில் ஒரு பிரிவான ஸெல்ஜுக்கியர்கள் 11ம் நூற்றாண்டுப் பகுதியில் பெரும் சக்தியாக எழுச்சி பெறத்தொடங்கினர். அந்தவகையில் அப்பாஸிய கலீபாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் அக்கால பேரரசான பைசாந்தியவின் கீழிருந்த அனடோலியாவையும் கைப்பற்றிக்கொண்டனர். அப்போதைய ஸெல்ஜுக்கிய சுல்தான் அலப் அல் அர்சலான் என்பவரே அனடோலியா எனப்பட்ட இப்பகுதிக்கு துருக்கி என பெயரிட்டவராவார்.

Monday, March 6, 2017

ஷீஆக்கள் பற்றிய ஓர் கண்ணோட்டம்



ஷீஆஎன்ற சொல் கட்சி, அணி, கோஷ்டி, குழு என்ற கருத்தைத் தருகிறது. ஆரம்பத்தில் அரசியல் ரீதியாக பிளவுபட்ட இரண்டு அணிகளை குறிப்பதற்காகத் பயண்படுத்தப்பட்ட இந்த வார்த்தைப் பிரயோகம் கால ஓட்டத்தில் ஒரு வழி கெட்ட பிரிவை இனம்காணும் வார்த்தையாக மாற்றம்கண்டது.

Tuesday, February 21, 2017

அல்-குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு



அல் குர்ஆன் என்பது இறைவனால் இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு வஹியாக அரபு மொழியில் அருளப்பட்ட அனைத்து சமூகங்களுக்குமான பொதுவான வேதமாகும். ஆரம்பத்தில் 'லவ்ஹுல் மஹ்பூல்' எனும் புனித ஏடுகளில் பாதுகாக்கப்பட்டிருந்த இவ்வேதம் பின்னர் 'பைதுல் இஷ்ஷா' எனும் கீழ் வானுக்கு இறக்கப்பட்டது. அங்கிருந்து வானவர் ஜிப்ரீல் (அலை) மூலம் மக்காவில் 13வருடங்கள் மற்றும் மதீனாவில் 10வருடங்கள் என சுமார் 23வருடங்களில் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. அந்தவகையில் நபி(ஸல்) அவர்களின் 40வது வயதில் ஹிறாக்குகையில் வைத்து சு10றாஅலக்கின் முதல் 5வசனங்களும் முதல் வஹியாக அருளப்பட்டன.