நபி (ஸல்) அவர்கள்
“இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக!
இறைவா! எங்கள் எமன் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக”
என்று பிறார்த்தித்தார்கள். அங்கிருந்தவர்கள்,
எங்கள் 'நஜ்த்' பகுதியிலும் (சுபிட்சம் வழங்கும்படி பிரார்த்தியுங்கள்) என்று
கேட்க,
(மீண்டும்) நபி (ஸல்) அவர்கள்,
“இறைவா எங்கள் ஷாம் நாட்டில் சுபிட்சத்தை
வழங்குவாயாக, எங்கள் எமன் நாட்டில் சுபிட்சத்தை வழங்குவாயாக” என்றே பிரார்த்தித்தார்கள். மக்கள்,
'இறைத்தூதர் அவர்களே எங்கள் 'நஜ்த்' பகுதியிலும் (சுபிட்சம் வழங்கும்படி பிரார்த்தியுங்களேன்)'
என்று (மீண்டும்) கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள்,
- மூன்றாவது முறையில் என்று நினைக்கிறேன்
“அங்கு தான் நில நடுக்கங்களும் குழப்பங்களும்
தோன்றும், அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்” என்று கூறினார்கள் - (ஸஹீஹ் புஹாரி :
7094)
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَزْهَرُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ ذَكَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَأْمِنَا، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي يَمَنِنَا ". قَالُوا وَفِي نَجْدِنَا. قَالَ " اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَأْمِنَا، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي يَمَنِنَا ". قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَفِي نَجْدِنَا فَأَظُنُّهُ قَالَ فِي الثَّالِثَةَ " هُنَاكَ الزَّلاَزِلُ وَالْفِتَنُ، وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ ".
இந்த ஹதீஸ்களின்
அடிப்படையில் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என இங்கு குறிப்பிடப்படப்படும் 'நஜ்த்' பிரதேசம் எது என்பது தொடர்பாக இரண்டு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஒன்று இங்கு குறிப்பிடப்படப்படும்
'நஜ்த்' பிரதேசம் ஈராக்கையே குறிக்கின்றது என்பதாகும். இதன்படி அரபு
மொழியில் 'நஜ்த்' என்ற சொல்லானது மலைப்பாங்கான பகுதியையே குறிக்கின்றது. அத்துடன் அங்கு கடந்த காலங்களில்
நடைபெற்ற அலி (ரழி) மற்றும் ஹுசைன் (ரழி) ஆகியோரின் கொலைகள்,
கராமிதாக்களின் தோற்றம், கவாரிஜ்களின் தோற்றம் மற்றும் ஈராக்-ஈரான் யுத்தம் போன்ற மோசமான
சம்பவங்கள் அதற்கு ஆதாரமாக முன்வைக்கின்றது.
எனவே நபி (ஸல்) அவர்களால் சைத்தானின் கொம்பு (குழப்பங்கள்,
பிரச்சினைகள்) தோன்றும் இடம் என முன்னறிவுப்புச் செய்யப்பட்ட
பிரதேசம் ஈராக் தான் எனக் குறிப்பிடப்படுகின்றது.
எனவே இவ்வாறான ஹதீஸ்களை
விளக்கும் போதும்,
மொழிபெயர்க்கும் போதும் ‘நஜ்த்’ என்பதற்கு அடைப்பினுள் ஈராக்
என்று சிலரால் குறிப்பிடப்படுகின்றது. அதாவது ‘நஜ்த்’ என்ற அரபுச் சொல்லுக்கான விளக்கம்
மலைப் பாங்கான பகுதி எனவும், ஈராக்தான் அவ்வாறு காணப்படுகின்றது எனவும் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் இதன் உண்மைத்
தன்மையை ஆராய்கின்ற போது இங்கு ‘நஜ்த்’ என்ற சொல்லானது சவூதி அரேபியவின் கிழக்குப்
பகுதியையே அதாவது தற்போதைய சவூதி அரேபியவின் அரசியல், பொருளாதார கேந்திரமாகக் காணப்படுகின்ற றியாத் பகுதியையே குறிப்பிடுகிறது
என்பதை பின்வரும் ஆதாரங்களின் மூலம் நிறுவலாம்.
1)
தற்போதைய சவூதியானது நீண்ட காலமாக அதன் மேற்குப் பகுதி ஹிஜாஸ்
என்றும் அதன் கிழக்குப் பகுதி நஜ்த் என்றும் வெவ்வேறாகவே காணப்பட்டது. 1924 ஆம் ஆண்டு நஜ்த் பிரதேசம் ரியாத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அத்துடன் ஹிஜாஸ் மற்றும் ரியாத் ஆகிய இரண்டு பகுதிகளும் இணைக்கப்பட்டு 1932 ஆம் ஆண்டே சவூதி அரேபியா இராச்சியம் உருவாக்கப்பட்டது. அதுவரை
இவ்விரண்டு பகுதிகளும் குறிப்பிட்ட பெயர்களில் வெவ்வேறாகவே காணப்பட்டன.
2) இங்கு ஷாம் மற்றும் யெமன் ஆகிய இரு பிரதேசங்களின் பெயர்களும்
பயன்பாட்டில் இருந்த பெயர்களைக் கொண்டே வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது போலவே நஜ்த்
என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க, ஏன் நஜ்த் என்ற சொல்லுக்கு மட்டும் ஈராக் என்று விளக்கத்தை அடைப்புக்குள்
பயன்படுத்த வேண்டும்?
மேலும் பிதன் (இறுதி
நாள் அடையாளங்கள்) சம்பந்தப்பட்ட மற்றும் இன்னும் பல ஹதீஸ்களிலும் ஈராக் என்ற பெயர்
வெளிப்படையாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க ஏன் இங்கு மட்டும் அதற்கு நஜ்த்
என்று சொல் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது?
உதாரணமாக இறுதிநாள்
நெருங்குகின்ற போது ஷாம்,
யெமன் மற்றும் ஈராக் பிரதேசங்களில் தோன்றும் இஸ்லாமிய படையினர்
பற்றி அபூதாவூதிலே வரக்கூடிய 2483 ஆம் இலக்க ஸஹீஹான ஹதீஸில் ஈராக் என்ற அறபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நபி (ஸல்) அவர்கள் இன்னும் பல இடங்களிலும் ஈராக் என்ற சொல்லைப் பயன்படுத்தி
உள்ளார்கள்.
3)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மதீனா வாசிகள் துல்ஹுலைபாவிலும், மற்றொரு வழியான அல்ஜுஹ்பாவிலும் இஹ்ராம் கட்டுவார்கள். இராக்
வாசிகள் தாத்து இர்க்கிலும்,
நஜ்த் வாசிகள் கர்னிலும், யெமன் வாசிகள் யலம்லம்மிலும் இஹ்ராம் கட்டுவார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்
1183b)
இந்த ஹதீஸின் அடிப்படையில்
நோக்குகின்ற இங்கும் ஈராக் என்ற சொல் வெளிப்படையாகவே பயன்டுத்தப்பட்டுள்ளதுடன், நஜ்த் மற்றும் ஈராக் என்பன வேறு வேறு பிரதேசங்கள் என்பதும் தெளிவாகின்றது.
அத்துடன் ஒவ்வொரு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் இஹ்ராம் அணியக்கூடிய இடங்கள் பற்றி
குறிப்பிடுகின்ற ஸஹீஹான பல ஹதீஸ்களிலும் நஜ்த் வாசிகள் கர்ன் அல்-மன்ஸில் எனும் இடத்திலேயே
இஹ்ராம் அணிய வேண்டும் என்றே குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கீழுள்ள
வரைபடத்தில் அவற்றின் அமைவிடத்தை அவதாணித்தால் தற்போதைய சவூதி அரேபியாவின் றியாத் பகுதிதான்
நஜ்த் பிரதேசம் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
4)
ஸஹீஹ் புஹாரியில் வரக்கூடிய இப்னு உமர் (ரழி) அறிவித்த மேலுள்ள
7093 ஆம் இலக்க ஹதீஸின் படி, நபி (ஸல்) அவர்கள் மதீனாவில்
இருந்து கிழக்குத் திசையை சுட்டிக்காட்டி அங்குதான்
சைத்தானின் கொம்பு உதயமாகும் என்றார்கள். எனவே உலகப் வரைபடத்தை எடுத்து நோக்கினால்
மதீனாவுக்கு கிழக்காக நஜ்த் அதாவது தற்போதைய ரியாத் பகுதிதான் காணப்படுவதை தெளிவாக
அவதானிக்க முடிகின்றது. ஈராக் ஆனது மதீனாவிற்கு
வடகிழக்கில் அல்லது வடக்குக்கு அன்மையாகவே
காணப்படுகின்றது.
5)
அதேபோல் ஸஹீஹ் புஹாரியில் வரக்கூடிய மேலுள்ள 7094ஆம் இலக்க ஹதீஸின் படி, நபி (ஸல்) அவர்களிடம் அங்கிருந்த மக்கள் “எங்களது நஜ்த் பிரதேசத்தின்
சுபீட்சத்துக்காகவும் பிரார்த்தியுங்கள்” என்றே கோரினர். இதன்படி எங்கள் நஜ்த் என்பது அரபுகள் வாழ்ந்த
சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியையே குறிக்கின்றது. ஏனெனில் அந்த நேரத்தில் நபியவர்கள்
சபையில் ஈராக் வாசிகள் அதிகம் இருந்திருக்க வாய்ப்பில்லை. உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலப்
பகுதியிலேயே பாரசீகம் இஸ்லாமிய ஆட்சிக்கு கீழ் வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
6)
அலி (ரழி) அவர்கள் (யெமனிலிருந்து) நபி (ஸல்) அவர்களிடம் சிறிய
தங்கக் கட்டி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் அக்ரவு இப்னு ஹாபிஸ்
அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ (ரழி),
உயைனா இப்னு பத்ர் அல் பஸாரீ (ரழி), பனூ நப்ஹான் குலத்தவரில் ஒருவரான ஸைத் அத்தாயீ (ரழி) மற்றும்
பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா இப்னு உலாஸா அல்-ஆமிரி ((ரழி) ஆகிய நால்வரிடையே
பங்கிட்டுவிட்டார்கள். அதனால் குறைஷிகளும் அன்சாரிகளும் கோபமடைந்து, “நஜ்து வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறார், நம்மை விட்டுவிடுகிறாரே”
என்று கூறினார்கள்.
அதற்கு நபி(ஸல்)
அவர்கள்,
“இவர்கள் (இப்போது தான் இஸ்லாத்தை தழுவியிருப்பதால்) அவர்களின்
உள்ளங்களை (முழுமையாக) இணக்கமாக்குவதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்)
தான் கொடுத்தேன்” என்று கூறினார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றியோரங்கள் உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் முன் வந்து, “முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்”
என்று கூறினார்.
உடனே நபி (ஸல்) அவர்கள்
“நானே (அல்லாஹ்விற்கு) மாறு செய்தால் வேறெவர்தான் அவனுக்குக்
கீழ்ப்படிவார்?
பூமியில் வசிப்பவர்களின் விஷயத்தில் அல்லாஹ் என் மீது நம்பிக்கை
வைத்திருக்க,
நீங்கள் என் மீது நம்பிக்கை வைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அப்போது வேறொரு மனிதர் இப்படி (குறை சொன்னவரைக்
கொல்வதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கேட்டவர் காலித் இப்னு வலீத் (ரழி) தான் என்று
நினைக்கிறேன். அவரை நபி (ஸல்) அவர்கள் (இதைச் சொன்னவரைக் கொல்ல வேண்டாமென்று) தடுத்துவிட்டார்கள்.
(குறை சொன்ன) அந்த நபர் திரும்பிச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள்,
“இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து அல்லது இவரின் பின்னே ஒரு
சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் எத்தகையவர்களாயிருப்பார்கள் என்றால், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளை தாண்டிச் செல்லாது. அவர்கள்
வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்தப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப்
போல் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்,
இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்,
சிலை வணக்கம் புரிபவர்களைவிட்டு விடுவார்கள். நான் அவர்க(ள்
வாழும் நாட்க)ளை அடைந்தால் ஆத் கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம்
அழித்து விடுவேன்”
என்று கூறினார்கள். (ஸஹீஹ் புஹாரி : 3344)
قَالَ وَقَالَ ابْنُ كَثِيرٍ عَنْ سُفْيَانَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِذُهَيْبَةٍ فَقَسَمَهَا بَيْنَ الأَرْبَعَةِ الأَقْرَعِ بْنِ حَابِسٍ الْحَنْظَلِيِّ ثُمَّ الْمُجَاشِعِيِّ، وَعُيَيْنَةَ بْنِ بَدْرٍ الْفَزَارِيِّ، وَزَيْدٍ الطَّائِيِّ ثُمَّ أَحَدِ بَنِي نَبْهَانَ، وَعَلْقَمَةَ بْنِ عُلاَثَةَ الْعَامِرِيِّ ثُمَّ أَحَدِ بَنِي كِلاَبٍ، فَغَضِبَتْ قُرَيْشٌ وَالأَنْصَارُ، قَالُوا يُعْطِي صَنَادِيدَ أَهْلِ نَجْدٍ وَيَدَعُنَا. قَالَ " إِنَّمَا أَتَأَلَّفُهُمْ ". فَأَقْبَلَ رَجُلٌ غَائِرُ الْعَيْنَيْنِ مُشْرِفُ الْوَجْنَتَيْنِ، نَاتِئُ الْجَبِينِ، كَثُّ اللِّحْيَةِ، مَحْلُوقٌ فَقَالَ اتَّقِ اللَّهَ يَا مُحَمَّدُ. فَقَالَ " مَنْ يُطِعِ اللَّهَ إِذَا عَصَيْتُ، أَيَأْمَنُنِي اللَّهُ عَلَى أَهْلِ الأَرْضِ فَلاَ تَأْمَنُونِي ". فَسَأَلَهُ رَجُلٌ قَتْلَهُ ـ أَحْسِبُهُ خَالِدَ بْنَ الْوَلِيدِ ـ فَمَنَعَهُ، فَلَمَّا وَلَّى قَالَ " إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا ـ أَوْ فِي عَقِبِ هَذَا ـ قَوْمٌ يَقْرَءُونَ الْقُرْآنَ، لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، يَقْتُلُونَ أَهْلَ الإِسْلاَمِ، وَيَدَعُونَ أَهْلَ الأَوْثَانِ، لَئِنْ أَنَا أَدْرَكْتُهُمْ لأَقْتُلَنَّهُمْ قَتْلَ عَادٍ ".
இந்த ஹதீஸின்படியும்
நஜ்த் பிரதேசத்தைச் சேர்ந்த அரபுத் தலைவர்கள் என்ற சொல் வெளிப்படையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அரபுகளின் சந்ததியினரே குழப்பவாதிகளாக இருப்பர் என்ற விடயமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
7) அபூதாவூதிலே வரக்கூடிய 4242 ஆம் இலக்க ஸஹீஹான ஹதீஸில் நபி (ஸல்) அவர்களிடம் பித்னா பற்றி வினவப்பட்டபோது, “என்னுடைய பரம்பரையை / வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் என்று கூறும் ஒருவரின் காலடியில் இருந்துதான் பித்னா (குழப்பங்கள்) தோன்றும், ஆனால் அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல, பின்னர் நிலையற்ற ஆட்சியைக் கொண்ட மனிதனைச் சுற்றி மக்கள் ஒன்றுபடுவார்கள்” என்று குறிப்பிட்டார்கள்.
حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ
سَعِيدٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ
سَالِمٍ، حَدَّثَنِي الْعَلاَءُ بْنُ عُتْبَةَ، عَنْ عُمَيْرِ بْنِ هَانِئٍ الْعَنْسِيِّ،
قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ كُنَّا قُعُودًا عِنْدَ رَسُولِ
اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ الْفِتَنَ فَأَكْثَرَ فِي ذِكْرِهَا حَتَّى ذَكَرَ
فِتْنَةَ الأَحْلاَسِ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا فِتْنَةُ الأَحْلاَسِ
قَالَ " هِيَ هَرَبٌ وَحَرْبٌ ثُمَّ فِتْنَةُ السَّرَّاءِ دَخَنُهَا مِنْ
تَحْتِ قَدَمَىْ رَجُلٍ مِنْ أَهْلِ بَيْتِي يَزْعُمُ أَنَّهُ مِنِّي وَلَيْسَ مِنِّي
وَإِنَّمَا أَوْلِيَائِيَ الْمُتَّقُونَ ثُمَّ يَصْطَلِحُ النَّاسُ عَلَى رَجُلٍ كَوَرِكٍ
عَلَى ضِلَعٍ ثُمَّ فِتْنَةُ الدُّهَيْمَاءِ لاَ تَدَعُ أَحَدًا مِنْ هَذِهِ الأُمَّةِ
إِلاَّ لَطَمَتْهُ لَطْمَةً فَإِذَا قِيلَ انْقَضَتْ تَمَادَتْ يُصْبِحُ الرَّجُلُ
فِيهَا مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا حَتَّى يَصِيرَ النَّاسُ إِلَى فُسْطَاطَيْنِ
فُسْطَاطِ إِيمَانٍ لاَ نِفَاقَ فِيهِ وَفُسْطَاطِ نِفَاقٍ لاَ إِيمَانَ فِيهِ فَإِذَا
كَانَ ذَاكُمْ فَانْتَظِرُوا الدَّجَّالَ مِنْ يَوْمِهِ أَوْ مِنْ غَدِهِ "
.
இந்த ஹதீஸின்படி நபி (ஸல்) அவர்களின் பரம்பரை / வம்சாவழி என குறிப்பிடும் ஒருவராலேயே குழப்பம் தோன்றும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்களின் வம்சாவழியைத் சேர்ந்த மக்காவின் அமீராக இருந்த ஸரீப் ஹுஸைன் என்பவர், ஆயுதம் ஏந்தி போராட தடைவிதிக்கப்பட்ட புனித மக்காவில் 1916 இல் இஸ்லாமிய கிலாபத்துக்கு எதிராக பிரித்தானியரின் உதவியுடன் சண்டையிட்டு, மக்காவின் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தார். பிறகு 1924 இல் ஸரீப் ஹுஸைனின் மகன் அலியிடமிருந்து, நஜ்த் (றியாத்) ஆட்சியாளரான சவூத் குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் அஜீஸின் படையினர் போரிட்டு மக்காவைக் கைப்பற்றிக் கொண்டார். இவ்வாறு இவ்விருவரும் இஸ்லாமிய கிலாபத்தை பலவீனப்படுத்தினர்.
அன்றிலிருந்து இன்று
வரை பிரித்தானிய,
யூத விசுவாசிகளான இந்த சவூத் குடும்பத்தினரது சர்வதிகார ஆட்சியே
சவூதி அரேபியாவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். புனிதமான இரண்டு நகரங்களை
நிர்வகிப்பவர்கள் என்றவகையிலும்,
இஸ்லாமிய நாடுகளின் முக்கிய தீர்மாணிப்பாளர் என்றவகையிலும் இவர்கள்
நினைத்தால் அவர்களின் தலைமையில் இன்றும் கூட இஸ்லாமிய கிலாபத்தை ஏற்படுத்த முடியும்.
ஆனால் அவர்கள் ஒருபோதும் அதனை செய்ய முனையவில்லை.
8)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு ஆட்சியாளர் மரணித்து கருத்துவேறுபாடு
ஏற்படும். அப்போது மதீனாவைச் சேர்ந்த ஒரு மனிதர் (இமாம் மஹ்தி) மக்காவுக்கு வெளிப்படுவார்.
மக்காவாசிகளில் சிலர் அவர் விரும்பாத நிலையிலும் அவரை கஃபாவிற்கு இழுத்துக் கொண்டுவந்து
ருக்ன் மற்றும் மகாமு இப்ராஹீமுக்கு இடையில் அவரிடம் பைஅத் (ஆட்சிப் பிரமாணம்) செய்வார்கள்.
இவருக்கு எதிராக சிரியாவிலிருந்து ஒரு படை அனுப்பப்படும். என்றாலும் அது மக்காவிற்கும்
மதீனாவிற்கும் இடையே உள்ள சமவெளியில் புதையுண்டு போய்விடும். இதை மக்கள் கண்டபிறகு
சிரியா மற்றும் ஈராக்கிலுள்ள நல்ல மனிதர்களும் ருக்ன், மகாமு இப்ராஹீமுக்கு இடையில் அவரிடம் பைஅத் (ஆட்சிப் பிரமாணம்)
செய்வார்கள். பிறகு குறைஷிக் குலத்திலிருந்து ஒருவர் அவருக்கு எதிராக கிளம்புவார்.
அவரின் தாய்வழி மாமன்கள் கல்ப் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். (அவருக்கு உதவியாக கல்ப்
கூட்டத்தாரைச் சேர்ந்த அவரின் தாய்வழி மாமன்கள் இருப்பார்கள்). இவர் இமாம் மஹ்திக்கு
எதிராக (கல்ப் கூட்டத்தாரின்) படையை அனுப்புவார். இந்தக் கல்ப் கூட்டத்தாரின் படையை
மஹ்தி தோல்வியுறச் செய்து அவர்களின் சொத்துக்களை போர்ச் செல்வங்களாகப் பெறுவார். அவற்றை
மக்களுக்கு பங்கிடுவார். அந்தப் பங்கில் கலந்துக் கொள்ளாதவர்கள் நட்டவாளிகளே. பிறகு அவர் உலகம் முழுவதும் இஸ்லாத்தை நிலைநாட்டியும், நபியின் வழிமுறைப்படியும் 7 வருடங்கள்
ஆட்சிச் செய்வார். பிறகு அவர் மரணித்துவிட அவருக்கு முஸ்லிம்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தி
அடக்கம் செய்வார்கள். (ஸூனன் அபூதாவூத் : 4286)
இமாம் மஹ்தி பற்றி
குறிப்பிடுகின்ற மேலுள்ள ஹதீஸின் அடிப்படையில், இமாம் மஹ்தி வெளிப்பட்டதும் அவருக்கு எதிராக வெளிப்படுகின்ற
இரண்டு (அரச) படைகளில் ஒன்று குறைஷி அரபுப் படையாகும் என்பது தெளிவாகின்றது.
9)
சவூதி அரேபியாவின் நஜ்த் பிரதேச ஆட்சியாளர்களும், அவர்களது படையினரும் 1916, 1917 களிலிருந்து பிரித்தானியாவின் Lawrance of Arabia வின் படையினருக்கும், பிரித்தானியருக்கும் பக்கபலமாக இருந்து இஸ்லாமிய கிலாபத்திற்கு
எதிராக கிளர்ச்சி செய்து,
1924 இல் இஸ்லாமிய கிலாபத் வீழ்த்தப்பட முக்கிய காரணியாக செயல்பட்டனர்.
இவ்வாறு இஸ்லாமிய கிலபத் வீழ்த்தப்பட்டமை (பெரும் பித்னா) பிற்காலத்தில் உலகலாவிய முஸ்லீம்கள்
பல பிரச்சினைகளுக்கும்,
அடக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்பட மிக முக்கிய காரணியாக அமைந்தது.
10) இன்று இஸ்லாத்துக்கு முரணான பல்வேறு அநாச்சாரங்கள் சவூதி அரேபியாவில் வெளிப்படையாகவே அரங்கேறுவதை காணமுடிகின்றது. அதாவது புனித கஃபாவின் தோற்றத்தையே விபச்சார நடனப் பெண்களின் அரைகுறை ஆடை உடனான தோற்றத்தை காட்சிப்படுத்தவும், அதன் மேல் ஏறி அவர்கள் நடனம் ஆடச் செய்யகின்ற அளவுக்கு அங்கு நிலைமை மாற்றமடைந்துள்ளது. அத்துடன் சைத்தானை வழிபடுவதற்கான கொண்டாட்டங்கள், மதுபான சாலைகள், விபச்சார விடுதிகள் மற்றும் இதுபோன்ற பல்வேறு அநாச்சார நிகழ்வுகள் மற்றும் களியாட்டங்கள் போன்ற பல்வேறு அசிங்கங்கள் அங்கு நடைபெறுவதையும் காணமுடிகின்றது.
மேலும் இவற்றைக்
குறைகூறுகின்ற,
விமர்சிக்கின்ற, கண்டிக்கின்ற
உலமாக்களை சிறையில் அடைத்தல்,
தூக்கிலிடுதல் போன்ற செயற்பாடுகளும் அங்கு தொடர்ந்தேர்ச்சையாக
நடைபெறுகிறது.
இஸ்லாத்தை அழிக்கத்
துடிக்கின்ற,
இஸ்லாத்தின் பரம விரோதியாக காணப்படுகின்ற அமெரிக்கா பொருளாதார
ரீதியாக மிகப் பலமாக இருப்பதற்கான முக்கிய காரணி சவூதி அரேபியாவும் அதனது நட்பு
நாடுகளும் காணப்படுகின்றன. அதாவது சவூதி அரேபியா தனது எண்ணை வர்த்தகத்தை அமெரிக்க டொலரில்
செய்யாமல் இருக்குமாக இருந்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாரியளவு வீழ்ச்சி அடையும்.
ஆனால் சவுதி அரேபியாவும் அதனது நட்பு அரபு நாடுகளும் அதனை ஒருபோதும் விரும்புவதில்லை.
கடந்த 2012 ஆம் ஆண்டு எகிப்தில் நடந்த முதலாவது ஜனநாயக தேர்தலில் மக்களால்
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மார்க்கப்பற்று
மிக்க ஹாபிழான முஹம்மத் முர்சியை பதவியில் இருந்து அகற்றி யூத சார்பு மிக்க அப்துல்லா சீஷி ஐ பதவியில் அமர்த்துவதற்கு முக்கிய காரணியாக செயற்பட்டதும்
சவுதி அரேபியா தான்.
2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில்
துருக்கி,
பாகிஸ்தான், மலேசியா போன்ற நாடுகளின் முயற்சியில் இஸ்லாமிய நாடுகளின் ராணுவ
கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தியதும் சவூதி அரேபியா தான்.
இஸ்ரேல் எதிர்ப்புமிக்க
யெமனின் ஹவுத்திகளுக்கு எதிராக பாரிய யுத்தத்தை ஆரம்பித்து நடத்தியதும் சவூதி அரேபியாவும்
அதன் நெருங்கிய நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகமும் ஆகும். அத்துடன் துருக்கி மற்றும்
ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து லெபனானில் (2025 இல்) இஸ்ரேல் சார்பு ஆட்சியாளர்களை முக்கிய பதவிகளுக்கு கொண்டு வருவதில் பின்னணியாகச்
சவூதி அரேபியா செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்கின்ற பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்ற
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சார்பாக பல வகையான உதவிகளை செய்து வருகின்ற, அரபு லீக்கில் இஸ்ரேலுக்கு எதிராக எந்த ஒரு தீர்மானத்தையும்
நடைமுறைப்படுத்த விடாமல் தடையாக இருக்கும் மிக முக்கிய நாடாகவும் சவூதி அரேபியா செயற்படுதைக்
காணலம்.
இவ்வாறு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் அமெரிக்க
மற்றும் இஸ்ரேலுக்கு சார்பாகவும், பலஸ்தீன் அப்பாவி மக்களுக்கும், பலஸ்தீன அப்பாவிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்ற ஹவுத்தி
மற்றும் ஹிஸ்புல்லாஹ் போன்ற அமைப்புக்களுக்கும் எதிராகவும் சவூதி அரேபியா பல சூழ்ச்சிகளையும் அநியாயங்களையும் செய்து வருகின்றது.
எனவேதான் மேற்கூறிய
விடயங்களை தொகுத்து நோக்குகின்றபோது நபி (ஸல்) அவர்களால் சைத்தானின் கொம்பு (குழப்பங்களும், பிரச்சினைகளும்) தோன்றக்கூடிய இடம் என முன்னறிவிப்புச் செய்யப்பட்ட
நஜ்த் பிரதேசம் தற்போதைய சவூதி அரேபியாவின் மையக் கேந்திரமாகக் காணப்படுகின்ற றியாத்
பகுதிதான் என்பது தெளிவாகின்றது.
குறிப்பு : இவை எனது தேடலின் மூலமாக கிடைத்த தகவல்களாகும். இது தொடர்பாக மாற்றுக் கருத்துக்கள் அல்லது தெளிவான மேலதிக விளக்கங்கள் காணப்பட்டால் தேவையற்ற வாதங்களைத் தவிர்த்து அவற்றை Comment பகுதில் முறையாக முன்வைக்கவும்.
No comments:
Post a Comment