.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, March 26, 2026

அரசறிவியல் (இலவச) நூல் அறிமுகம்

அரசறிவியல் எனும் இந்நூலானது, முழுமையாக 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, முழுமையாக புதிய பாடத்திட்டத்தை தழுவிய வகையில், இலகுவான மொழிநடையில் அரசறிவியல் பாடத்திட்டத்தின் கீழ் முதல் மூன்று அலகுகளையும் மையப்படுத்தி இற்றைப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

Sunday, March 8, 2026

கல்விப்புலம் சார் பொது அறிவுகள் (முதலாம் பதிப்பு: 2023 Pdf)

"கல்விப்புலம் சார்  பொது அறிவுகள் போட்டிப் பரீட்சை வழிகாட்டி நூலின் முதலாம் பதிப்பினை (2023) கீழே தரப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து இலவசமாக தரவிறக்கம் (Download) செய்துகொள்ளவும். 2025 இல் இற்றைப்படுத்தப்பட்ட (Updated) இதன் இரண்டாம் பதிப்பினை தபால் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். அது தொடர்பான தகவல்கள் பின்வருமாறு,

Saturday, March 7, 2026

பசியின் பின்னால் மறைந்திருக்கும் பலன்கள்: ரமழான் நோன்பின் அதிசயங்கள்

ரமழான் மாதம் என்பது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஆன்மீகப் பரிசுத்தத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் வளர்த்துக்கொள்ளும் ஒரு புனிதமான காலப்பகுதியாகும். இந்த மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் நோன்பானது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாகும். அதிகாலை  முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு, பானம், இச்சை மற்றும் சில உலகியல் விருப்பங்களைத் தவிர்த்து, அல்லாஹ்வின் திருப்தியை நாடுவது இதன் அடிப்படை நோக்கமாகும்.

Monday, August 25, 2025

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான ஒரு பார்வை

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. இகல்விச் சீர்திருத்தமானது பல்வேறு முக்கிய அம்சங்களையும், பல மாற்றங்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. அவை பின்வருமாறு,

Tuesday, June 17, 2025

சைத்தானின் கொம்பு வெளிப்படும் நஜ்த் பிரதேசம் எது?

நபி (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கியபடி, 'அறிந்து கொள்ளுங்கள்! குழப்பமும், ஷைத்தானின் கொம்பு உதயமாவதும் இந்த இடத்திலிருந்து தோன்றும்' என்று சொல்லக் கேட்டேன் - (ஸஹீஹ் புஹாரி : 7093)

Saturday, August 10, 2024

கல்வியும் வேலை உலகும்

கல்வியானது பல்வேறு வகையான நோக்கங்களைக் அடிப்படையாகக் கொண்டே வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி சமகால நவீன உலக முறைமையில் தனிமனித, சமூக மற்றும் நாடுகளின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் செல்வாக்குச் செலுத்துகின்ற மிக முக்கிய காரணியாக கல்வி காணப்படுகின்றது. இதனால் இன்றைய உலகில் கல்விக்கு மிக உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் கல்வியின் சமகால முக்கிய வகிபங்குகளாக பின்வரும் விடயங்களை குறிப்பிடலாம்.

Thursday, August 8, 2024

கல்வியும் மனித அபிவிருத்தியும்

கல்வி என்பது உண்மையைத் தேடுகின்ற, வாழ்க்கையில் நீடித்த ஒரு செயன்முறையாகும். இது சாந்தமான பண்புகளை வளர்க்கக் கூடியதாகவும், ஒழுக்கத்தை விருத்தி செய்யக் கூடியதாகவும், சமூகத்தினதும் சூழலினதும் தேவைகளுக்கு ஏற்ப வழங்கப்படக் கூடியதாகவும், சமூக வாழ்க்கைக்கு தேவையான பயிற்சிகளை வழங்கக் கூடியதாகவும் மற்றும் சகலருக்கும் சமமான வகையில் கிடைக்கக் கூடியதாகவும் அமைய வேண்டும். கல்வியானது  முன்பள்ளிக் கல்வி, பொதுக் கல்வி, உயர் கல்வி, தொழிற் கல்வி, வளர்ந்தோர் கல்வி, சமூகக் கல்வி, பாலியல் தொடர்பான கல்வி என பல்வேறு வகையான பிரிவுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. 

பிள்ளைகளின் ஆளுமைச் சீராக்கத்தில் சமூகத்தினதும் ஆசிரியர்களினதும் வகிபங்கு

ஆளுமையைக் குறிக்கும் Personality எனும் ஆங்கிலச்சொல், மறைப்பு / முகமூடி எனும் கருத்தையுடைய persona எனும் இலத்தீன் மொழிச் சொல்லிருந்து வந்ததாகும். இதன்படி ஆளுமை என்பது ஒருவர் அணிந்திருக்கும் முகமூடி என்னும் கருத்தினை வெளிப்படுத்துகிறது. உளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த இயங்கியல் பண்புகள், அவை தோற்றுவிக்கும் நடத்தைகள், உணர்வுகள் மற்றும் சிந்தனைகளைக் குறிக்கிறது. 

Saturday, June 1, 2024

க.பொ.த உயர் தரத்தில் கலைத்துறையை தெரிவு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

க.பொ.த உயர் தரத்தில் கலைத்துறையை மாணவர்கள் தெரிவு செய்து கற்பதன் மூலம் அவர்களால் பல்வேறு நன்மைகளை அடைந்துகொள்ள முடியுமாக இருக்கின்றது. எனினும் அதிகமான மாணவர்கள், பெற்றார்கள் மற்றும் ஆசிரியர்கள் இது தொடர்பாக அறிந்திருப்பதில்லை. எனவேதான் இவ்வாக்கமானது அவர்களுக்கு இது தொடர்பான தெளிவினை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது.

Friday, May 17, 2024

க.பொ.த உ/த பாடத்தெரிவும் சா/த பின்னரான கல்வி வாய்ப்புக்களும்

இன்று அதிமான மாணவர்கள் க.பொ.த சதாரண தரப் பரீட்சையினைத் தொடர்ந்து தமது உயர்தர மற்றும் தொடர் கல்வியை தெரிவு செய்வதில் சிக்கல் நிலையினை கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதற்கு அவர்களுக்கு இது தொடர்பான தெளிவுகள் வழங்கப்படாமை முக்கிய காரணமாகும். எனவேதான் இம்மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தெளிவினை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் வழிகாட்டல் கருத்தரங்கின் குறிப்புகள் இங்கே பதிவிடப்படுகின்றது.